Posts

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியம் பார்க்க வேண்டுமா? ஏன்...?

வாஸ்து சாஸ்திரத்தின் நோக்கம், மக்களுடைய நல்வாழ்வுக்காக அவர்களுடைய தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதுடன்,  கட்டப்படுகின்ற கட்டிடம், மனிதன் இயற்கையுடனும், இப்பிரபஞ்சத்தின் ஒழுங்குடனும் இசைந்து போவதற்கு உதவுவதுமாகும்.  கட்டிடம் கட்டுவதற்கான மனையில் (நிலம்), கட்டிடத்தின் அமைவிடம், நோக்கும் திசை, மற்றும் கட்டிடத்தின் வெவ்வேறு பகுதிகள் இருக்க வேண்டிய இடம் என்பவற்றைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது வாஸ்து புருஷ மண்டலம் ஆகும். வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு சதுர வடிவத்தை 64 அல்லது 81 கட்டங்களாகப் பிரித்த ஒரு வரி வடிவமாகும். இவற்றில் குறிப்பிட்ட சில கட்டங்களுக்கு பல்வேறு தேவர்கள் அதிபதிகளாக இருப்பதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இம் மண்டலத்தின் மையப் பகுதிக்கு வேதகால முழுமுதற் கடவுளான பிரம்ம தேவன் அதிபதியாக உள்ளார். 81 கட்டங்களைக் கொண்ட வாஸ்து புருஷ மண்டலத்தில் மையப்பகுதியிலுள்ள ஒன்பது கட்டங்களும் இவருக்கு உரியவை. இதனால் இப்பகுதி பிரமஸ்தானம்  எனப்படுகிறது. இம்மண்டலத்தில் மொத்தமாக 45 தேவர்கள் இருப்பதாக வாஸ்து நூல்கள் கூறுகின்றன.  முக்கியமான எட்ட...

வீட்டின் 4 மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக்கூடாத பொருட்கள் என்ன...?

வாஸ்து முறையில் அமைந்த வீட்டில்தான் அமைதி, செல்வம் எல்லாம் பொங்கி வழியும். நான்கு திசைகள்: வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. நான்கு மூலைகள்: வடகிழக்கு மூலை, தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை. வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய மூலை / சனி மூலை). தெற்கும் கிழக்கும் சந்திக்கும் இடம்  தென்கிழக்கு மூலையாகும் (அக்னி மூலை). தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி மூலை/ கன்னி மூலை)  மற்றும் வடக்கும் மேற்கும் சந்திக்கும் இடம் வடமேற்குமூலையாகும் (வாயு மூலை). இவ்வாறு திசைகளையும், மூலைகளையும் அடிப்படையாக கொண்டு அதற்கு ஏற்றார் போல் நல்முறையில் ஒரு வீடோ/ தொழில் நிறுவனமோ கட்டும்பொழுது மனிதனின் வாழ்வு தடுமாற்றமோ, தடமாற்றமோ இல்லாமல் அமையும். திசை காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்து கொள்ளவேண்டும். வீட்டின் முதன்மை வாசல் வழியாகத்தான் நேர்மறை சக்திகள்  வீட்டினுள் நுழையும். ஆகவே நாம் வாங்கும் வீட்டி வாசம் கதவு தென்மேற்கு திசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். தென்மேற்கு திசைதான் தீய சக்திகளில் நுழைவு வாயி...

வாஸ்து குறைப்பாட்டை தீர்க்குமா மாவிலை...?

வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம்? பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயிலில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகள் இட்டு, அதன்மீது தேங்காயை வைத்துத்தான்  சாமிக்கு பூஜை செய்வார்கள். விசேஷ நட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்குவது வாஸ்து குறைபடுகள் விரைவில் தீர வழிபிறக்கும். லட்சுமி கடாஷம் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்: தலைவாயிலில் இருக்கும் வாக்குதேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்  மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி குறையாது. பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது. மாவிலைகளுக்கு இன்னொரு தலி சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சுழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைக்கு  உண்டு என்கிறர்கள். அலங்காறத்துக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை என்பதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்.

வாஸ்துப்படி மனையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் தெரியுமா....?

வீட்டில் தினந்தோறும் சூரியோதயம் மற்றும் சூரியன் மறைவு நேரத்தில் செய்யப்படும். அக்னி ஹோத்திரம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வு அமையவும் உதவும். வீட்டில் நாமே செய்யும் யாகமே அக்னி ஹோத்திரம். முறையான கணக்குகளுடன் செய்யப்பட்ட பிரமிடுகளை வீட்டில் உபயோகப்படுத்தி மூப்பினை அகற்றலாம். மேலும், மன உலைச்சல், பல்வேறு பிரச்சனைகளை நீக்கி நிம்மதியாக நம்மை வாழவும் வைக்கின்றது. ஈசான்யம் உயரமாகவும், கன்னி மூலை பள்ளமாகவும் இருந்தால் பல துயரங்களில் ஆழ்த்தி விடும். சந்ததிகளுக்குக் கண்டங்கள் உண்டாகும்.  அக்னி மூலை மேடாகவும், வாயு மூலை பள்ளமாகவும் இருந்தால், நல்லவை நடக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். வாயு மூலை  மேடாகவும், அக்னி மூலை பள்ளமாகவும் இருந்தால், அவ்வீட்டில் தீ விபத்து, திருட்டு போன்றவை ஏற்படும். கன்னி மூலை உயரமாகவும், ஈசான்யம் பள்ளமாகவும் இருந்தால், மிக்க செல்வ வளர்ச்சியும், புகழும் உண்டாகும். ஆரோக்கியம் கூடும். கிழக்கு, அக்னி மூலை ஆகியவை உயரமாகவும், வாயு மூலையும் மேற்கும் பள்ளமாகவும் இருந்தால், துயரத்திலும், சிக்கலிலும் ஆழ்த்தி  விடும். அக்னி மூலையு...

வாஸ்து முறைப்படி நான்கு மூலைகளில் இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம்....!

வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதுயும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, கன்னி மூலை ஆகிய மூலைகளில் இருக்கவேண்டிய இருக்கக் கூடாத பொருட்களைப் பற்றி பார்ப்போம். தென்கிழக்கு மூலையை அக்னி மூலை என்று அழைப்பர். பூஜை அறை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது. அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் போனால் கிழக்கு முகமாக அமைக்கலாம் அல்லது அடுப்பு, எரிவாயு போன்றவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். கழிப்பறை, குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில்  கழிப்பறை அமைக்கலாம். ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க  வேண்டும். பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயது முதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை ஆகியவை ஈசான மூலையில்  அமைக்கலாம். வீட்டின் கன்னி மூலை எப்போதும் அடைத்து வைத்திருப்பது ந...

ஒரு மனையை கட்ட வாஸ்து சாஸ்திரம் அவசியமா...?

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு மனை எந்த திசையை நோக்கி அமைந்துள்ளது. அந்த மனையானது எந்த திசையை நோக்கி வீடு கட்ட  வேண்டும். எந்த திசையில் வாசல் இருக்க வேண்டும், என்னென்ன திசையில் என்னென்ன அறைகள் இருக்கவேண்டும், என்ற கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். வாஸ்து சாஸ்திரம் படி ஒரு மனையை  கட்டினால் தான், அந்த வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகளவு இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றனர். வாஸ்து மூலைகள்: வாஸ்து பூஜை அறை நாம் புதிதாக வீடு கட்டும்போது, தெய்வங்களை வழிபடவேண்டும் என்று தனியாக பூஜை அறை ஒன்றை கட்டுவோம். அந்த பூஜை அறை எங்கு இருக்கவேண்டும் என்றால், பொதுவாக சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானின் மெல்லிய கதிர்கள் எந்த  இடத்தில் விழுகிறதோ அங்கு பூஜை அறையை அமைப்பது நல்லது என்றுஆன்றோர்கள் பலர் சொல்கின்றார்கள். அதன் படி பார்த்தால் சூரியன் கிழக்கு திசையில் தான் உதயமாகிறது, ஆகையால் வீட்டின் வடகிழக்கு திசையில் வாஸ்து பூஜை அறை அமைப்பது வாஸ்து படி விஷேசம்  ஆகும். பொதுவாக வடகிழக்கு மூலையில் வாஸ்த...

வாஸ்து சாஸ்திரத்தின்படி சமையலறை எந்த திசையில் இருக்க கூடாது...?

வீட்டில் சமையலறை வாஸ்து மூலைகள் ஆன அக்கினி பகவான் மூலையில் அதாவது தென்-கிழக்கு திசைகளில் தான் அமைக்க வேண்டும். சமையலறை அமைப்பதற்கு இதுவே மிகவும் பொருத்தமான பகுதியாகும். இந்த வாஸ்து சாஸ்திரம் படி சமையலறையை அமைப்பதினால்  வீட்டில் ஐஸ்வரியம் பொங்கும். சமையல் செய்யும் பொழுது, வீட்டுப் பெண்மணி அல்லது சமையல்காரர் கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். அதே போல ’அடுப்பு’  அது கேஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு அல்லது நிலக்கரி அடுப்பு அல்லது மின் அடுப்பாக இருந்தாலும், அது  அமைக்கப்பட்டிருக்கும் திசை முக்கியமானது என நம்பப்படுகிறது. எக்காரணம் கொண்டு வாஸ்து மூலைகள் ஆன ஈசானிய மூலையில் அதாவது வடகிழக்கு மூலையில் சமையலறையை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் வீட்டில் இருக்கும் செல்வங்களை எரிப்பதற்கு சமம். ஒரு வீட்டின் சமையல் அறை என்பது வாஸ்து படி தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பாக இருக்கும். அதுவே அக்கினி பகவானுக்கு உகந்த திசை ஆகும். தென்கிழக்கு திசையில் சமையல் அறையை தவிர வேறு அறைகள் இருப்பது நல்லதல்ல.